+1 514-800-2610

மிதிபலகை பயணத்தால் தொடரும் உயிரிழப்புக்கள் .....

2024-02-26 02:54
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பேருந்தின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும் , பேருந்தின் மிதி பலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர் .

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும் போது , வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து , தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பேருந்தினை நிறுத்த முதல் , பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேவேளை கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரு உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்ற நிலையில் , ஆபத்தான மிதிபலகை பயணத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி